கவிஞர் எழுத்தாளர் தயாநிதிய தாய் நாடு.....!

உயிரினும் மேலான
தாய் நாடு
உருவமே மாறியது
இன் நாளில்.
உயிர்ப் பயிர்
மேய்ந்திடும்
மேல் நாடும்
கை கொடுத்தே
ஓய்ந்தது இன் நாளில்...

அரச மரத்தோடு
வந்தார்கள்
புத்த மதத்தோடு
நிறைந்தார்கள்
அடித்துப் பறிப்பதை
பிழைப்பாக்கி
அப்பாவித் தமிழரை
அழித்தார்கள்
அவர்கள் இன்பத்தை
தொலைத்தார்கள்
இன்நாளில்../
வந்தோரை வாழ
வைக்கும் பண்பாட்டால்
சொந்த மண்ணிலேயே
அகதியுமானார்கள்.
கட்டிக் காத்திட்ட
கலை கலாச்சாரம்
காற்றிலே கரைந்திட
வீதிக்கு வீதி
சதிராட்டம்.நடக்குதாம்
இன்நாளில்..!
கோலம் கலைந்திட்ட
திரு நாட்டை
ஒரு கரம் கொண்டு
வரைதல் எவ்வாறு..
வளங்கள் நிறைந்த
நம் நாட்டின்
நலன் காத்தல்
வேண்டாமோ!
பலம் கொண்டெழுந்து
ஒன்றாகி அதனை
மீட்டல் ஒன்றே
கடனாகும் இன் நாளில்..

ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி




0 கருத்துகள்:

கருத்துரையிடுக