ஜெசுதா யோ எழுதிய கண்ணீர் வடித்து இதயம் புலம்புகிறது,

இன்றைய நாள்
தமிழர்களின் கறுப்பு தினம்
இதயங்கள் இரத்தக்கண்ணீர்
வடித்து நின்ற நாள்
இனவெறியால்

எம் மக்களை இரக்கமின்றி
மண்ணுக்குள் புதைத்த நாள்
அங்கங்கள் இழந்து
ஆயிரம் ஆயிரம் உறவுகள் 
நிற்கதியான நாள்
மௌனமாக கண்களை மூடி
கண்ணீர் வடித்து செல்ல முடியாது
இதயம் புலம்புகிறது,
விடிவொன்று எமக்கு கிடைக்காதா என
ஏங்குகிறது.....???

இறந்த எம் இனத்தினரை எண்ணி
கண்ணீரோடு கண்களைமூடி
மௌன அஞ்சலி செலுத்துகிறேன்,
ஆத்மா சாந்தியடைய..


எமது தேச உணர்வுடன்


ஜெசுதா யோ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக