வன்னியூர் செந்தூரனின் சிம்மசொப்பனவீரன்

வன்னியின் வீரமகன்
வரலாறான துக்ககாலம்
கானகக்கரைகளின் காவல்
கனலில் களம் கண்ட லீமா

மணலாறு முதல் ஆனையிறவு குடாரப்பு
முல்லைக்கோட்டை முதல் மன்னார் என
மன்னனின் பாதமறியாப் போர்க்களங்களுண்டோ
மருண்டோடாத மூர்க்கப் படைகளுமுண்டோ

பால்ராஜ்அண்ணா ஒரு தனிச்சரித்திரம்
ஈழத்தமிழ் போராட்டக்காவியத்தில்
மற்றைய தளபதிகளிலிருந்து சற்று வேறுபட்டவர்
மரணத்தை முன்னிலையில் ஏற்கத்துணிந்த மறவன்

முல்லைநிலத்தின் மைந்தன் வீழ்ந்ததுமே
வன்னியினெல்லை வற்றத்தொடங்கியதுண்மை
மாரடைப்பில் மௌனிக்காவிட்டால்
முள்ளிவாய்க்காலும் பகைக்கு கனவே என்றும்..


ஆக்கம் கவிஞர்-வன்னியூர் 

செந்தூரன்-


0 கருத்துகள்:

கருத்துரையிடுக