மறக்கத்தகுமோ... 01.02.2017

1998 ஆம் ஆண்டு இதே நாளில் தமிழீழத்தின் கழுத்துப்பகுதியாக இருக்கும் ஆனையிறவு படை முகாமை நோக்கிய தாக்குதல் ஒன்று நடைபெற்றுருந்தது. வருகின்ற சுதந்திர தினத்தைக்கு மக்களை கிளிநொச்சி ஊடாக கண்டி வீதியில் இருந்து கொண்டுவருவோம் என்று கூறி "சத்ஜெய "படை நடவடிக்கையை எடுத்து வந்த சிங்களத்தின் முதுகெலும்புடைக்க திட்டமிடப்பட்ட சண்டை ஒன்றுக்கான வலுவேற்றும் சண்டையாக இன்றைய நாள் ஆனையிறவுப்படை முகாமுக்குள் பெரும் பூகம்பத்தை விளைவிக்க கரும்புலிகள் அணி ஒன்று உள்நகர்ந்திருந்தது.
லெப்டினன் கேணல் சுபேசன் அல்லது கிள்ளிவளவன் தலமையில் கரும்புலிகளான மேஜர் குமுதன், மேஜர் ஜெயராணி, மேஜர் ஆசா, மேஜர் மங்கை, கப்டன் குமரேஸ், கப்டன் இந்து, கப்டன் நளாயினி, கப்டன் தனா கப்டன் உமையாள், கப்டன் செங்கதிர் ஆகிய வேங்கைகள் தாக்குதலுக்கான கட்டளைக்காக காத்திருந்தனர். கட்டளைப்பீடத்தில் இருந்து கட்டளை வந்த போது எரிமலையாக குமுறிய கரிய புலிகள் ஆனையிறவு தளத்தை துவம்சம் செய்தனர்.
சிங்களப்படையின் முதுகெலும்பை உடைக்க ஆனையிறவு படைத்தளத்தில் ருத்ர தாண்டவம் ஆடனர் கரும்புலிகள். தாம் வெடித்து இனங்காத்த மாவீரங்களாக ஆனார்கள். தமிழீழ தேசத்துக்காக இரத்த சிதறல்களாக காற்றோடு கலந்து விட்டார்கள் எம் கரிய புலிகள். அவர்களின் உயிர் தியாகம் எம் தமிழீழத்தை உயிர்ப்பிக்கும் என்பது திண்ணம்...
சண்டை நடந்து கொண்டிருக்க கொடுக்கப்பட்ட இலக்குகளான ஆட்லறி தளத்தினை முற்றுமுழுதாக தகர்த்தெறிந்த கரும்புலிகள் அடுத்த நகர்வுக்காக காத்திருந்தனர். ஆனால் கரும்புலிகளை தளம் திரும்புமாறு கட்டளை வந்த போது, வீரச்சாவடைந்த தமது தோழர்களை நினைவோடு சுமந்து கொண்டு தளம் திரும்புகின்றனர்.
அணித்தலைவனான சுபேசன் நெஞ்சிலும் காலிலும் பாரிய விழுப்புண் பட்டிருந்ததால் அவனால் நகர முடியாத நிலை ஆனால் அவனை தூக்கி கொண்டு செல்ல முனைகின்றனர் அணியினர். " இல்ல என்னை விட்டிட்டு நீங்க போங்கோ" அவன் கத்துகிறான். இல்ல உங்கள விட்டு போக மாட்டம். அவனை விட்டு செல்ல விரும்பாத அணி அவனிடம் கெஞ்சுகிறது. "நீங்கள் நிறைய சாதிக்க வேண்டியவர்கள் என்னை தூக்கி செல்வதால் தாமதமாகி நீங்களும் காயப்பட வேண்டாம் அண்ணனை கவனமா பாருங்கோ நான் சார்சர் இழுக்கப் போறன். அவன் கட்டளை இடுகிறான். அவனை விட்டு பிரிந்த சில வினாடிகளில் அதிரந்த வெடியோசை ஊடாக சுபேசனின் ஓங்கி ஒலித்த குரலும் ஓய்ந்து போனது. அணி தளம் மீளகிறது... அணியின் இருந்து களத்திடை வெடித்த 11 கரும்புலிமறவர்களின் தியாகத்தை சுமந்தவாறு


0 கருத்துகள்:

கருத்துரையிடுக