எம் மக்கள் உணர்வால் வேறுபட்டவர்கள் அல்ல என்பதை இன்று நிரூபித்திருக்கின்றனர்.


எழுக தமிழ் வெற்றிகரமாக மட்டுநகரில் தமது தடத்தினை பதித்திருக்கிறது. எம் மக்கள் உணர்வால் வேறுபட்டவர்கள் அல்ல என்பதை இன்று நிரூபித்திருக்கின்றனர்.
இதன் போது பங்களிப்பு செய்த அரசியல் தலைவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் இத் தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அதோது சமூக இணைய தளங்களில் பங்களிப்பும் ஏராளம். அவர்களுக்கும் நன்றிகள். கௌரவ விக்னேஸ்வரன் ஐயா உற்பட கஜேந்திரகுமார், வியாழேந்திரன் போன்றோரையும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
கால நிலையையும் பாராது குழந்தைகள் முதல் வயோதிபர் வரை இந்த உணர்வு மிக்க பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். இதனை பார்க்கும் போது கடந்த காலங்கள் பொங்கு தமிழாக எழுச்சி பெற்றவை நினைவு வருகிறது. தமிழினம் உறங்கவில்லை என்பதை நினைக்க பெருமையே

0 கருத்துகள்:

கருத்துரையிடுக