மறக்கத்தகுமோ 07.02.2017

2005 மாசித்திங்கள் 7 ஆம் நாள் இலங்கை அரசு தான் சண்டைப்பிரியர்கள் என்று உறுதிப்படுத்திய நாள். தமிழீழத்திற்கு பெரும் சோகத்தை தந்து தனக்கும் நடந்த துயரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உள்ளுக்குள் வெற்றி பெற்றதாக நகைத்துக் கொண்ட நாள்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிங்களத்தின் ரணில் அரசுக்கும் இடையில் சர்வதேச நாடுகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட சண்டை நிறுத்தம் 2002 ஆம் வருடம் ஆரம்பித்த போது தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதாவது இராணுவ ஆளுகைக்குள் இருந்த பகுதிகளிலும், விடுதலைப்புலிகளின் அரசியல் போராளிகள் அரசியல் வேலைகளுக்காக சென்று வரலாம் என்ற ஒரு நடைமுறையை சண்டைநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து ஒன்று ஏற்று கொண்டிருந்தது. இதன் பிரகாரம் நோர்வே நாட்டின் தலமையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சண்டை நிறுத்த காலத்தில் போராளிகள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் அரசியல் வேலைகளோடு நின்றனர்.
அதில் ஒருவன் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பொறுப்பாளனாக மக்கள் பணியில் இருந்த போராளி தான் லெப்டினன் கேணல் கௌசல்யன். தமிழீழ அரசிற்குரிய நிர்வாக கட்டமைப்புக்குட்பட்ட அரசியற்துறை சார்ந்த அனைத்து நிர்வாகங்களும் சரியான வகையில் மட்டு அம்பாறை மாவட்டங்களில் நடைமுறையில் செயற்படுத்த வேண்டுமென உறுதியாக நின்றவன் சமாதான காலப்பகுதியில் மக்களுக்கான உச்சமான அரசியல்ப் பணியினை செயற்ப்படுத்த அரசியல்துறைக்கு உட்பட்ட தமிழீழத்தின் அனைத்துக் கட்டமைப்புக்களையும் மட்டக்களப்புக்குள் நகர்த்தி மக்களுக்கான அரசியற் பணியை முன்னெடுத்தார்.
அரசியல்துறை மட்டுமல்லாது புலனாய்வுத்துறை தமிழீழ காவற்துறை, நீதி நிர்வாகத்துறை, நிதித்துறை, படைத்துறை, அனைத்துலக தொடர்பகம் என்று எந்த துறை சார்ந்த அனைத்து பொறுப்பாளர்கள் தளபதிகளுடன் இணைந்து தாயாக விடுதலை வீச்சை விரைவு படுத்துவதில் முக்கிய போராளியாகி இருந்தவர். அதற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.
இந்த காலத்தில் தமிழ், முஸ்லீம் மக்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்களை வேறுபாடுகள் அற்று ஒன்றுபடுத்துவதிலும் வெற்றி காணத்துடித்து செயற்பட்டார். அதை விட எமது அமைப்பின் மீது கறை படிந்த பல துரோகத்தனங்கள் முளை விட்டு வளர்வதும் அதை உடைத்தெறிவதும் வரலாறு. அந்த வரிசையில் தென் தமிழீழத்தில் 2003 ஆம் வருட காலத்தில் நடந்த துரோகத்தனத்துக்கு பின் எமது போராட்டம் மீது சர்வதேச அளவில் ஏற்பட்ட அதிர்ப்த்தியை களைய வேண்டிய பாரிய பொறுப்பும் கௌசல்யனுக்கு வந்திருந்தது.
இதை எல்லாம் உடைத்து பயணித்த அரசியல் போராளிக்கு எதிர்பார்க்காத பெரும் அதிர்ச்சியும் சுமையும் கடல் மடியில் சுனாமி என்ற உருவத்தில் வந்து சேர்ந்தது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் கடலால் வலுவிழந்து போன போது, இந்திய இலங்கை அரசாங்கங்கள் கூட திணறிக்கொண்டிருந்த மீள்கட்டுமான, ஆற்றுகைப்படுத்தல் பணிகளை உலகம் வியக்கும் வகையில் விடுதலைப்புலிகள் செய்து முடித்திருந்தனர். அதில் முக்கிய பங்கு கௌசல்யனுக்கு உண்டு.
இத்தகைய ஆளுமை மிக்க போராளிக்கு தேசியத் தலைவரின் பணியகத்தில் இருந்து அழைப்பு வந்திருந்த போது தனது போராளிகள் மூவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேரு ஆகியோருடன் வன்னி சென்று தலைவரையும் அரசியல்துறை பொறுப்பாளரையும் சந்தித்து விடைபெறுகிறார். வவுனியா இராணுவ தடைமுகாமில் போராளிகளின் பயணிப்பை உறுதிப்படுத்தி கொள்கிறது சிங்கள படை.
தடைமுகாமில் இருந்து திட்டமிட்ட தொடர் கண்காணிப்பு வளையத்துக்குள் இவர்களது வாகனத்தை வைத்திருக்கிறது சிங்கள புலனாய்வு பிரிவு. வெலிகந்தையில் வைத்து இவர்களை நயவஞ்சகமாக கொலை செய்ய வேண்டுமென்று திட்டமிடப்பட்டு சிங்கள புலனாய்வாளர்களும் தேச விரோத கும்பலும் வெலிக்கந்தையில் காத்து கிடக்கின்றனர்.
நிராயுத பணிகளாக வந்த கௌசல்யனின் அணி எதுவும் அறியாதவர்களாய் பயணத்தை தொடர, கோழைத்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொன்றனர் அவர்களை.
மண்ணின் விடுதலைக்காக லெப்.கேணல் கௌசல்யன்,மேஜேர் புகழவன்(சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜேர் செந்தமிழன்(தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2லெப்.விதிமாறன்(சிவபாதம் மதன் செட்டிபாளையம்) ஆகிய வேங்கைகள் அந்த இடத்திலையே வீரச்சவடைய வாகன சாரதி எஸ்.விநாயக மூர்த்தியும் சாவடைகிறார். மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு படுகாயமடைந்து அடுத்த நாள் மருத்துவமனையில் சாவடைகிறார்....
இந்த சம்பவத்தை சர்வதேசமே அதிர்சசியோடு பார்ததது... ஐ.நா செயலராக இருந்த கோபிஅனான் கண்டனத்தினூடாக சிங்களத்தின் மிலேச்சத்தனத்தை வெளியிட்டிருந்தார்...
கவிமகன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக