பதினாறு வயதில் பல ஆசை வருமே, இனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா?

பதினாறு வயதில் பல ஆசை வருமே,
இனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா?

பதினாறு வயதில் பல ஆசை வருமே,
இனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா?
திசைக் கொன்றாய் பறக்கும் சிட்டுக்குருவி
வெடிகுண்டை தன் மடியில்- காவி
வீணா தன்னை கொல்ல நினைக்குமா?
எப்படி ஆச்சு?
ஆலயத்தில் போய் அழுவதில்-பயனில்லை
ஆட்லறிதான் இனி எங்கள் பேச்சு!
இப்படி நினைத்தாரே ஒருவர்!
உன்னால்-என்னால்-எவரால் எண்ணி
பார்த்திருக்க முடியும்? ஆகியிருந்ததை!!
இப்படி இப்படி பாருங்களேன்!
எவர் நினைத்திருப்பார்-இந்த
இரும்பு மகன் எங்களை ஆள்வான் என்று?
ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு ஆசை வரும்.
மனிதன் மாறுவான்;அப்படிதான் என்கிறார்!
பத்துக்களில் இருந்து ஐம்பதுகள் வரை நீர்
அசைந்ததே இல்லையே எப்படி எப்படி?
எப்படி எப்படி உம் பாட்டன்
வயசுள்ளவரைக்கும் தலைவரென்றானீர் எப்படி எப்படி?
மூச்சடைத்து கிடந்த இனத்துக்கு-கதவுடைத்து
பிராணவாயு தந்த கரிகாலரே
எங்கள் தேசத்து பிரவாகமே
பிரபாகரனே!தலைவா
பட்டமும் பதவியும் பத்து காசும் வருது என்றால் என்னவும் செய்வார்.
கொஞ்சம் சக்தி வந்தாலே
அடுத்தவனை அடிச்சுக் கொன்று வாழ நினைக்கிறார் அற்பர்!
புரிய முடியவில்லை
உதாரணம் உமக்கு நிகர் இவ் உலகில் யாரும் இருந்தால் தானே
ஒப்பிட்டு உம்மை நாம் அறிந்து கொள்வோம்.
வேலுப்பிள்ளையின் மகவென்று நீர் ஆகலாம்.
இந்த வேதனையில் கிடந்து உழலும்
ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் நீர் தான் தாய்!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக