//ஆறாததுயர் மீள்நினைவுகள்..!கவிதை ஜெசுதா யோ

ஆழிப்பேரலை
ஆணவம்கொண்டே
அசுரத்தனமாக
கரையோர மக்களையெல்லாம்
காவுகொண்டாயே...!

ஆண்டுகள் பலகடந்தாலும்
எண்ணும் போது உள்ளம்
இன்னும் பதைபதைக்கிறது
துயரம் தாங்காது
கண்கள் பனிக்கிறது...!

இன்னுமொரு இன்னிலை
வராதிருக்க வழிபடுகிறோம்
ஆழித்தாயே.
சினம்கொண்ட சீற்றம் வேண்டாமே
சீரான மக்கள் வாழ்வை
சிதைத்திடாது
அமைதிகாத்திருந்திடவே...!

எத்தனை எத்தனை உயிரிகள்
இரவோடு இரவாய்
கண்முன்னே காவுகொண்டாய்
அத்தனை உயிர்களுக்குமாய்
ஆண்டவனை வேண்டுகிறேன்
ஆத்மசாந்தியடையட்டும்...
சாந்தி சாந்தி....!!

ஆக்கம் ஜெசுதா யோ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக