மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் !!


மார்கழித் திங்கள் 25 ஆம் நாள் உலகப்பெருநாள். அந்த உன்னதத் திருநாளன்று தான் இந்த உத்தமன் தன்னினத்திற்காக உயிர் நீத்து தியாகியாகினார். புனிதனை நினைந்து உருகிய வேளையில் புனிதம் நிறைந்த இடத்தில் தன் இன்னுயிரை ஈகம் செய்து ஜோசப் பரராஜசிங்கம் மாமனிதரானார்.
தன் வாழ்வு துறந்து பிறர்க்கென வாழும் பெருந்தகைகளால் வாழும் இவ்வுலகென்பார்கள். எத்தனை அழிவுகளைச் சந்தித்தபோதும் இந்த மண்வாழ்கிறதென்றால் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் போன்ற மாமனிதர்களது தியாகத்தாலேதான் என்றால் மிகையாகாது.
“தமக்கென முயலா தோன்தான்… பிறர்க்கென முயலுநர் உண்மையானே”
மேற்படி கூற்றுக்கு இப் புறநாநூற்றுப் பாடல் சான்று பகிர்கின்றது.
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்
தமிழீழம் ( மட்டக்களப்பு மாவட்டம் )
தாய் மண்ணில் : 26-11-1934
தாயக மண்ணில் : 25-12-2005
அவரோர் அரச ஊழியர். சினிமாத் துறை வாணிபத்தில் சிறப்புற்று விளங்கியவர். இவ்வளவோடு நின்றிருந்தால் கோடீஸ்வரராக வாழ்ந்திருப்பார்.
கொள்கை கோட்பாடுகள் நிறைந்த இலட்சியம் கொண்டது தமிழ்த் தேசிய அரசியல். இது மலர்ப்படுக்கை அரசியல் அல்ல. மாறாக இது வோர் முட்படுக்கை. முட்படுக்கை அரசியலை முழுமனதோடு ஏற்றுக்கொண்டே நெருப்பாற்றைக் கடக்க முன்வந்தவர்.
1934 ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் 26 ஆம்நாள் இந்த மண்ணில் தோற்றம் பெற்றவர் 1952 களில் தன்னுடைய 18 ஆவது அகவையில் தந்தை செல்வாவின் அரசியல் பாசறையில் இணைந்து கொண்டார்.
தனிச் சிங்களமொழிச் சட்டத்தை எதிர்த்து 1956 ஆம் ஆண்டு தந்தையவர்கள் தமிழ்த் தேசம் தழுவிய மிகப்பெரிய அறவழிப்போரை ஆரம்பித்தார். அன்றைய நாள் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் திருமண தினமாக விருந்தபோதும் அந்த அறப்போரில் களமாடி மகிழ்ந்தாரென்றால் அவர் கொண்டிருந்த இனப்பற்றை என்னவென்று சொல்வது.
அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் பாரிய சவால்களை இவ்வரசியல் வாழ்வில் எதிர்கொண்டார்.
1972 ஆம் ஆண்டு இலங்கையைக் குடியரசாக்கியது ஈழத்தமிழினத்தை அரசியல் அனாதையாக்கியது. அறப்போர் தீவிரமடைந்தது. அறப்போரின் வெக்கை தாங்கமுடியாது அப்போதிருந்த சிறிமாவோ அவர்களின் அரசாங்கத்தின் மட்டக்களப்பு அரசியல் அதிகாரி ஜோசப் அவர்களை நுவரெலியா மாவட்டத்திற்குத் தூக்கியெறிந்தார். ஆனால் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களோ அரசாங்கப் பதவியை உதறித் தள்ளி முழுநேர அரசியலுக்குள்காலூன்றினார்.
இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்தகாலத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டார் என்ற காரணத்திற்காக ஜோசப்பரராஜசிங்கம் அவர்களை விடுதலைப் புலிகள் அழைத்துச் சென்றனர்.
தங்களது தவறுக்காக வருந்தி அவரை விடுவித்தனர்.அப்போது சொந்தங்களெல்லாம் “வேண்டாம் இந்த விபரீத அரசியல்அதிலிருந்து ஒதுங்குங்கள்” என்று அவரை வற்புறுத்தினார்கள். ஆனால் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.
2004 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களையெல்லாம் விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த கருணா அணியினர் தங்கள் பகுதிக்கு அழைத்தனர்.
“வடகிழக்கென்ற தமிழ்த்தேசிய அரசியல் இனி எமக்கு வேண்டாம். மட்டக்களப்பென்ற அளவோடு இனி அரசியல் அமைய வேண்டும்” என்று கட்டளை பிறப்பித்தார்கள்.
“இயக்கங்கள் உருவாகும் முன்பே தந்தை செல்வாவின் தலைமையையேற்று அரசியலுக்குள் வந்தவன். வட கிழக்கு என்ற தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து இம்மியளவும் என்னால் விலக முடியாது” என்று ஜோசப்பரராஜசிங்கம் அவர்கள் பதிலுரைத்தார். அன்றிலிருந்து பாரிய கொலை அச்சுறுத்தல்களுக்கு ஆளானார். இதற்கெல்லாம் சற்றும் மசியாதவராகத் தேர்தலில் போட்டியிட்டார்.
தங்கத்தை உரசித் தரம் பார்ப்பதுபோல் அவரது இலட்சிய வேட்கைக்கு ஏற்பட்ட சோதனைகள் இவையாகும்.
இவை எதற்குமே அஞ்சாத நெஞ்சினனாக அரசியல் புனிதம் காத்தார். தானேற்ற இலட்சியத்திற்கும் தலைமைக்கும் விசுவாசமாக வாழ்ந்ததனால் தந்தை செல்வாவால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமை அணியான தமிழர் விடுதலைக் கூட்டணியின்சிரேஷ்ட தலைவரானார். தான் மட்டுமல்லாது தனது மனைவி சகிதம் அறப்போர் அரசியல் கண்ட பெருமைக்குரியவர்.
சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளோடு நெருக்கமான உறவுகளைப்பேணி அவ்வப்போது நடைபெற்ற மனிதவுரிமை மீறல்களையெல்லாம் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர். பல படுகொலை அத்தியாயங்களைக்கண்டது தமிழர் விடுதலைப்போராட்ட வரலாறு. அத்தனை படுகொலைகளையும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளில் பதிவு செய்தவர் அவர்.
கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் நடந்தபோது அவர் ஓயாது சற்றும் தளராது மேற்கொண்ட அழுத்தத்தினால் அப்போதிருந்த பிரேமதாச அரசாங்கம் அந்தப் படுகொலைகளை விசாரிக்க விசாரணைக்குழுவை அமைத்தது.
தமிழினம் சந்தித்த அனர்த்தங்களிலிருந்து மக்களுக்குச்சற்று ஆறுதலளிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை வரவழைத்தவர். அவ்வமைப்பின் முதலாவது கூட்டம் அவரது இல்லத்திலேயே நடைபெற்றது.
மத்திய முகாம் பகுதியிலே கோணேஸ்வரி என்ற தமிழ்ப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அவரது பெண்ணுறுப்பிலே குண்டு வைத்துத் சிதைக்கப்பட்ட கொடூரமறிந்து சீற்றம் கொண்டவர் உலகரங்கிலே மட்டுமல்லாது இங்கும் மிகவும் காரசாரமாகக் கண்டித்துக் குரலெழுப்பிக் கொண்டிருந்தார். அதன் நிமித்தம் அந்த விசாரணை நடைபெற்ற கல்முனை நீதிமன்றச் சாட்சிக் கூண்டில் மண்ணுக்கு விடை கொடுக்கும் வரை ஏறி இறங்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.
ஐ.நா.ச.இன் மனிதவுரிமை ஆணைக்குழு ஈழத்தில் போர்க்குற்ற விசாரணை வேண்டி நிற்கும் இந்தக்காலகட்டத்தில் ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலன் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் இல்லாதிருப்பது தமிழர்களுக்கெல்லாம் பெரும் கவலையாகும்.
பாராளுமன்றப்பிரவேசம்
1989 இல் நடைபெற்றபொதுத் தேர்தலில் தோல்வியடைந்தபோதும் இடையிலே ஏற்பட்ட ஒரு வெற்றிடத்தினால் அவர் பாராளுமன்றப் பிரதிநிதியானார்.
அவர் ஆற்றிய அளப்பரிய சேவையினால் 1994 ஆம்ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் 48000 வாக்குகளுக்கு மேல் பெற்று மட்டக்களப்பின் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியாக அவரை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
மூன்று மொழிகளிலும் விற்பன்னர். மொழி ஆளுமை மிக்கவர். பாராளுமன்றத்தில் அவரது கட்சியின் பிரதம கொறடாவாகப் பணியாற்றினார். அவரது பேச்சுக்கள் அனைத்தும் மக்களது வரவேற்பைப்பெற்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றல்லாமல் அமைச்சர்கள் பிரதமர் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரதும் நல்லெண்ணத்தைப் பெற்றவர். அவரது இறுதி நிகழ்வில் பங்குகொண்ட அனைவரும் அவரை அவ்வாறே புகழ்ந்துரைத்தார்கள்.
இயல்பாகவே தன்னிடமிருந்த எழுத்து வல்லமையோடு பத்திரிகைத் துறையினுள்ளும் தன்னைச் சேர்த்துக்கொண்டு இதழியல் சேவையைத் தொடர்ந்தார். “சுகுணம் ஜோசப்” என்ற பெயரில் அப்போது பிரபல்யமாக விளங்கிய தினபதி சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில் பத்திகள் புனையத் தொடங்கினார். ஆய்வுகள் நிறைந்த பத்திகள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
எழுதுவதோடு விட்டுவிடாமல் கிழக்கிலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் கண்டு அதன் தலைவராகப் பணிபுரிந்து இதழியல் சேவையின் உயர்வு கண்டவர் 71 ஆண்டுகள் இம்மண்ணிலே தமிழர்க்காக வாழ்ந்து தமிழ் மண்ணிலே வித்தாகிய மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் பல்லாளுமை கொண்ட மக்கள் தலைவன். இப்பேற்பட்ட விசுவாசம்மிக்க தலைமையைப் பறிகொடுத்த தேனாடு அப்படியொரு தலைவன் வருகைக்காகக் காத்திருக்கிறது!
நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்துகொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர். இக்கொலைக்குக் காரணமானவர்கள், சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுத் துறையினரும் அவர்களின் கைக்குகூலிகளாக இயங்கிவருபவர்களுமே. குறிப்பாக ஒட்டுகுழு அமைச்சர் கருணா.
தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது.
பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது.தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்துவருகின்றதெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள்; குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள்.
அவரின் பலியெடுப்பிற்கு அவர்கள் குறித்த இடம் தேவனின் திருச்சபை. தமிழினத்தின் அழிவொன்றையே நித்தம் உருப்போடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவர்களால் தான் இந்த ஈனச்செயலை அதுவும் இவ்வாறான ஒரு நாளிற்; செய்யமுடியும். விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே. பாலகுமாரன் சொன்னது போல் இத்தகைய ‘விழி திறக்காதவர்களுக்காக திரு. ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’.
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகி, வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம்.
தமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயதப்போராட்டம் முனைப்புப் பெற்ற இன்றைய காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர். இன்றைய நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த திரு.ஜோசப்பின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள். ஒரு பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட திரு.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நாம் அறிந்த வரையில் அனுதாபமோ கவலையோ வெளியிடவில்லை.
கதிர்காமர் கொலையையடுத்து வெறும் அனுமானங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கெதிராகத் தடைகளைக் கொண்டுவர முயற்சித்த சர்வதேச அபிப்பிராயம், கருணை வழியவேண்டிய நாளொன்றில் காவு கொள்ளப்பட்ட உயிரை ஏன் கண்டுகொள்ளவில்லை?
ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையா?
ஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையா?
குறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா?
ஆந்த நம்பிக்கை மீது மண்விழவில்லையா ? இவை யாவற்றிலிருந்தும் புலப்படும் உண்மை: விடுதலை கோரிப் போராடும் இனம் தனிமைப்படுத்தப்படும்;;உலகின் அக்கறை கோரி அவர்கள் எழுப்பும் குரல் யாருமற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் தீனக்குரலாகி ஓயும் என்பதே.
மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் இந்த உண்மைகள் திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன.
மணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக