விழித்தெழுக தமிழ் மக்களே

விழித்தெழு தமிழ் மக்களே எங்கள் விடுதலைப் பயணத்தில் எம்மை காத்து வந்த காவலர்கள்இன்று இல்லை
இதனால் எமது மூதாதையர் கட்டி காத்த வளங்களை இன்றைய இளையோர் தம் சுய இலாபத்திற்காய்விற்று பிழைக்கிறார்கள். நாளைய எமது சமுதாயதிதிற்கு, எம் பிள்ளைகளுக்கு நாம் எதை வழங்கப்போகின்றோம்? மக்களே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் என்னவெனில் நாம் விழித்துக் கொண்டிருக்கும் போதே எம் வளங்கள் திருடப்படுகின்றது. #கடவுளினால் எமக்கு அருளப்பட்ட எமது இயற்கை வளங்கள் இலாபத்திற்காக இன்று அடுத்தவர்களுக்கு விற்க்கப்படுகின்றது.

நீங்கள் எமது வளங்களை விற்றால் எமது பிரதேசம் நீரில் மூழ்கின்ற நேரம் நாம் எங்கு சென்று எம் வழங்களை காக்கப்போகின்றோம்.

#அடுத்து எமது பிரதேசம் வியசாயத்தை ஆதாரமாகக் கொண்ட பாமரமக்களிற்காக ஒதுக்கப்பட்ட பிரதேசம். இப்பிரதேசசத்தில் உள்ள வளங்களை எம் பிரதேச மண்ணை சுரண்டுகிறார்கள

இந்த மண்ணிற்காக எத்தனை உயிர்திதியாகங்கள் செய்திருக்கின்றார்கள் என்று உங்களுக்கு தெரியுமல்லவா?
இருந்தும் எங்கள் மண் இயந்திரங்கள் மூலமாக விற்கப்படுகின்றது ஒரு நாளில் எத்தனை தடவைகள் இந்த இயந்திரங்கள் சென்று வருகின்றன என்று நீங்கள் எண்ணியதுண்டா?
அத்தனையும் எம் வளங்கள் களவாடப்படுவதை என்பதை நீங்கள் உணர்ந்ததுண்டா?
நாம் விழித்துக்கொண்டிருக்கும் போது எம் வளங்கள் களவாடப்படுவது போன்று நாளை எமது உடல் உறுப்புக்கள் திருடப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இதை நாம் தடுக்கா விட்டால் நம் கையால் நம் கண்ணை குத்துவது போல் எம் இனம் முற்று முழுதாக அழியும்
இவற்றை கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடக்க வேண்டிய அதிகாரிகள் பிரதேசசேயலாளர்,மாவட்ட அதிகாரி, பிரதேச காவலர்கள், மற்றும் எம்மால் தெரிவுசெய்யப்பட்ட பாரளமன்ற உறுப்பினர்கள், உங்கள் மேடை பேச்சு மற்றும் போதாது உங்களுக்கு தெரிந்தும்; இந்த வளங்கள் களவாடப்படுகின்றது  நீங்கள் எவ்வாறாயினும் இச்செயலை முற்றுமுழுதாக தடுத்து நிறுத்த வேண்டும் இல்லையெனில் நாளை உங்களுக்கு வாக்களிப்பதுற்கு மக்கள் இருக்க மாட்டார்கள்.

இதை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் இதை நாங்கள் கையாலாகதவர்களாக இச்செயலை செய்கின்றொம் என்று மட்டும் எண்ண வேண்டாம். எம்மால் முன் வர முடியவில்லை மற்றும் எம் மண்ணை,சமுகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கரையும் எம் மண் மீதுள்ள பற்றும் மாவீரர்களின் கனவுகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் நாம் முன் வருகின்றோம் இது எந்த இயக்கத்தையோ,குழுவையோ சார்ந்ததோ இல்லை. இதை ஒரு தனி மனித கருத்தாக அல்லாது சமுகம் நலனுக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை எந்தவித அரசியல் நோக்கத்திற்காகவோ அல்லது இலாபத்திற்காகவோ முறையிடவில்லை. தயவுசெய்து அன்பான மக்களே நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும் நாளைய சமுதாயத்திற்காக நாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வரும் வளங்கள் முழுமையாக திருடப்படுகின்றத

படுவான்கரையில் உள்ள வளங்களை திருடி எழுவான்கரையை உயர்த்தினால் படுவான்கரையில் வெள்ளம் வந்தால் நாம் எங்கு செல்வது. எழுவான்கலையில் வாழ்வதும் எம் மக்கள்தான் ஆனால் எங்களது வளங்கள் எம் கண்முன்னால் திருடப்படுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இது எமக்கு அருளப்பட்ட வளங்கள் இதை நாம் விற்போமானால் எழுவான்கரையில் இருந்து ஒரு பிடி மண் கிடைக்குமா.

இதை உண்மையான தமிழர்களெனின் இதை தடுப்பதுற்கு முற்பட வேண்டும் மக்கள் மட்டுமல்ல இப் பிரதேச அதிகாரிகள் இலஞ்சம் வாங்கி விட்டு உங்கள் சுய இலாபத்திற்காக செய்கின்றனர்
இச்செயலை அணுணமதிக்க கூடாது.
எம் மண்ணில் இருந்து விட்டு எழுவான்கரையில் பகட்டுக்காக வாழுகின்ற மக்களும் இதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இங்கிருக்கின்ற எம் விவசாயமக்களின் வளங்களையும் மண்ணையும் எடுத்துச் சென்றீர்கள் என்றால் நாங்கள் எவ்வாறு வாழ்வது?....
எங்கள் அடையாளங்கள், எங்கள் பண்பாடுகள் அழிக்கப்படுது போன்று எங்கள் வழங்கள் சதியால் திருடப்படுகின்றது எவ்வாறாயினும் தடுக்க முயற்சி செய்ய வேண்டியது எமது கட்டாய கடமையாகும் உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் ஒண்றிணைந்து எஞ்சியுள்ள வளங்களையாவது காப்பாற்ற முன் வருவீர்கள் என்று பெரும் நம்பிக்கையோடு இந்த துண்டுபிரசுரம் செய்யப்படுகின்றது.

இவ்வழிவை தடுத்து நிறுத்தாவிடின் பெரும் நாசம் எம்மை தொடரும் என்பது நிதர்சனமான உண்மையாகும். துமிழ் தேசிய வாதம் பேசும் பொய்யானவர்களே இந்த திருட்டு வேலைகளை செய்கின்றார்கள்.
அன்பான எம் இனிய மக்களே அழிவை தடுத்து நிறுத்த முன்வாருங்கள்……


செஞ்சோலைப்பூக்கள்
படுவான்கரை

  • மட்டக்களப்பு.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக