புலி உறுப்பினர்கள் இராணுவத்துடன் சேர்ந்து கொண்டதால் அதிர்ச்சியில் அரசு


இறுதியுத்தத்தில் சரணடைந்தும் பிடிக்கப்பட்டும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவது போன்று செயற்பட்டு
வெளிநாட்டுப் புலிகளுடன் இணைந்து மீண்டும் புலிகள் அமைப்பைக் கட்டமைக்க முற்படுவதாக அரசாங்கப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறான தகவலின் பிரகாரமே தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் சிலர் பிடிக்கப்படுவதாகவும் அத்துடன் இப்புலிகள் அமைப்பினருக்குத் தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மிகவும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரச புலனாய்வுத் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சர்வதேச விசாரணைக்கும் போர்க்குற்றவாளிகள் தண்டனைக்கு உள்ளாகுவதையும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் அரசாங்கத்துடன் சேர்ந்து நீர்த்துப் போக வைத்துள்ளதாக விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அறிந்துள்ளதாகவும் இதன் காரணமாக சில உறுப்பினர்களுக்கு அவர்கள் தண்டனை வழங்க முற்பட்டுள்ளதாகவும் அரச புலனாய்வுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளதாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக