முன்னாள் போராளிகள் விசாரணைக்காக கொழும்புக்கு அழைப்பு!

 
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், விசாரணைக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக, யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகள் அனைவரையும் எதிர்வரும் 30ம் திகதி கொழும்புக்கு வருமாறு புனர்வாழ்வு அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இந்த அறிவித்தல் யாழ் மாவட்ட புனர்வாழ்வு அமைச்சினூடாக வழங்கப்பட்டுள்ளது.
வடக்குக் கிழக்கில் அமைந்துள்ள அனைத்து மாவட்டச் செயலகங்களிலும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் பொருளாதார விடயங்கள் உள்ளிட்ட பதிவுகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் அலுவலகங்கள் இயக்கப்பட்டு வந்தன.இதில் விடுதலையான முன்னாள் போராளிகள் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். குறித்த பதிவின் அடிப்படையிலேயே தற்போது கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக