தாய்மண்ணுக்காய் களம் கண்டவள் உதவிகேட்கிறாள் உதவி செய்விர்களா என்று

தனக்கென சொந்தங்கள் எதுவும் இல்லை- கவலை தெரிவிக்கும் முன்னாள் போராளி

வயிற்றில் துப்பாக்கிச்சூட்டுக் காயத் தழும்புகளுடன் வாழ்ந்துவரும் தனக்கு ஆஸ்துமா வருத்தமும் உள்ளதாக முன்னாள் போராளியான இளையதம்பி தவராணி கவலை வெளியிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி தனது சொந்த ஊரான மட்டக்களப்பிற்கு வரும் போது தனக்கு 24 வயது என தவராணி குறிப்பிடுகின்றார்.
இவரின் தற்போதைய நிலைமை குறித்துஅவர் இவ்வாறு குறிப்பிட்டார். 9 வருடங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தனக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை என மிக வேதனையுடன் தெரிவித்தார். தனக்கு காணித்துண்டு ஒன்று மாத்திரம் உள்ளதாகவும், ஆனால் வீடு கட்டுவதற்கு வசதி இல்லாமல், கொக்கட்டிச்சோலையிலுள்ள தனது நண்பி ஒருவரின் வீட்டில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றிய ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை, தனக்கென்று சொந்தங்கள் எதுவுமில்லை எனக் கவலை தெரிவிக்கும் தவராணி, தன்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை என்றும் தெரிவித்தார்.
ஆகவே, தனக்கு ஓர் வீடாவது இருக்குமானால் தானும் குடும்ப வாழ்வில் இணைந்து கொண்டு வாழலாம் எனவும் தனக்கு இருப்பதற்கும் வீடற்ற நிலையில் அங்கும் இங்குமாக அலைந்து திரிவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார். எந்தவித சுயதொழிலும் இல்லாமல், வருமானமும் இல்லாமல் தனக்கு உதவுவதற்கு யாரும் இல்லையே என்ற ஏக்கம் தனக்கு உள்ளதாகக் குறிப்பிட்டார். ‘ஸ்ரீலங்கா இராணுவத்திலிருந்து வெளியேறியவர்களுக்கு, அரசாங்கம் பல உதவிகளைச் செய்வதாகக் குறிப்பிட்ட அவர், தம்மைப் போன்றவர்களைக் கவனிக்க யாரும் இல்லை’ என அங்கலாய்கின்றார்.
தமிமீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வீடு வந்துள்ள முன்னாள் போராளிகளையும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வருடம் வீடு வழங்குவதற்காக பயனாளிகள் பட்டியலில் தனது பெயரும் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும், தான் ஒரு தனிநபர் என்ற காரணத்தினால் தனது பெயர் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார். இதுதொடர்பில் பிரதேச செயலகத்தில் 3 தடவைகள் கடிதம் கொடுத்துள்ள நிலையில், இதுவரையும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார். தனது வயிற்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயத் தழும்புகளுடனும், ஆஸ்துமா வருத்தத்துடனும் வைத்திய செலவிற்கே பணம் இல்லாத துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த பலர், தற்போதும் சிறைகளில் வாடுவதாகவும் அனைவரையும் அரசாங்கம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
(தொலைபேசி எண் விரைவில் தரப்படும் உதவி செய்யுங்கள் எம் உறவுகளே)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக