சி. வி. விக்கினேஸ்வரன் கனடிய மண்ணுக்கு வருகை தந்து தாயகத்திற்கு திரும்பி செல்ல முன்பாக!

 கனடிய மண்ணுக்கு வருகை தந்து கடந்த ஒன்றரை வாரமாக தமிழ் மக்களையும் கனடிய அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து வந்த வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் அவர்கள் இன்றைய நாளில் தனது முதலாவது கனடிய மண்ணிற்கான வருகையை முடித்து கொண்டு தாயகத்திற்கு திரும்பி செல்ல முன்பாக இறுதி மக்கள் சந்திப்புடனான உரையை மக்களுக்கு ஆற்றியதோடு மக்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கினார்.

 ரவேற்பு நடனம் என்பனவற்றை தொடர்ந்து முதல்வர் உரை இடம்பெற்றது.
தொடர்ச்சியாக பல சந்திப்புகள் ஊடாக மக்களை சந்தித்து வந்தவர் என்ற வகையில் இன்றைய நாளில் தனது பயணத்தின் முன்பாக மக்களை ஆவலாக உடல் நிலை சுகயீனமுற்ற நிலையிலும் சந்தித்த அவரை மக்களும் பிரியாவிடை கொடுத்து மதிப்போடு அனுப்பி வைத்தார்கள்.
கனடிய மண்ணிற்கான தனது வருகை அதன் பயன்கள் மக்களை சந்தித்ததன் கருத்து உள்வாங்கல்கள், கனடிய அரசியல் பிரமுகர்கள் சந்திப்பின் பயன்கள் என பல்வேறு விடயங்களும் இன்றைய முதல்வரின் உரையில் எடுத்து வரப்பட்டது.
மக்களின் கேள்விகளை துண்டுகள் கொடுத்து எழுதி பெற்று கொண்ட ஏற்பாட்டாளர்கள் அவற்றில் இருந்து தமக்கு பிடித்த 10 கேள்விகளுக்கு மட்டுமே பதில்களை அவரிடம் கேட்டிருந்தார்கள்.
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் அவர்கள் உண்மையாக தெளிவாக பதில் சொல்லி இருந்தாலும் பதிலளிக்கப்படாத என் கேள்வியான
” தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்கள் மூடப்பட்டு ஆண்டு கணக்காக வாடி வதைக்கப்படும் ஈழ அகதிகள் விடுதலையாக வேண்டும் என்ற விவகாரத்தில் ஏன் எமது தலைவர்கள் எவரும் இந்திய இலங்கை அரசுகளுக்கு அழுத்தத்தை கொடுத்து முகாம் சிறப்பு முகாம்களில் தமிழகத்தில் வேதனைப்படும் உறவுங்களை விடுவிக்க குரல் கொடுத்து சிறப்பு முகாம்களை மூட செய்யவில்லை?” என நான் எழுதி கேட்ட என் கேள்வி அவரது செவிக்கு சென்றடைய வாசிக்கப்படவே இல்லை என்பது வேதனைக்குரிய விடயம். ஆனால் அவர் உடல் நிலை காரணமாக கூறப்பட்டது. இதே போல் கட்டு காட்டாக கேள்விகள் மக்களிடம் இருந்து கேட்கப்பட்ட பொழுதும் அவை யாவற்றுக்கும் பதில் எடுத்து வர வாய்ப்பு இருக்கவில்லை.
குறுகிய காலத்தில் மக்களை முதல்வர் சந்திக்க பல சந்திப்புகளை ஒழுங்கமைத்திருந்தார்கள் ஏற்பாட்டு குழுவினர். ஆனால் அதே போல் சில முக்கிய சந்திப்புகளை ஏற்படுத்த தவறியமையும் குறையாக பார்க்கப்பட்டது.
முதலமைச்சர் அவர்கள் மக்களிடம் பலவற்றை மனம் விட்டு பேசியிருந்தார். மக்களும் அவருக்கு மதிப்பளித்திருந்தார்கள்.
மக்களை சந்தித்து மக்களோடு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, சமூகம், அரசியல் சார் பல்வேறு கருத்து பகிர்வுகளை வெளிப்படையாக உணர்த்திய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பேசப்பட்ட குறைகளை தீர்த்து வைக்க செயல்கள்கட்டமைப்புகளை உருவாக்கி திட்டங்கள் வகுத்து தருவதாக உறுதி பூண்டார்.
தமிழ் மக்களுக்குள் ஒற்றுமையை மீண்டும் மீண்டும் வலியுறுத்திய முதலமைச்சர் அவர்கள் சமகால தமிழ் மக்களின் இன்னல்களை சர்வதேச சமூகத்திற்கு குறிப்பாக கனடிய அரசியல் தலைவர்களுக்கு எடுத்து கூறி புலத்தில் வாழும் தமிழர்களின் போராட்டத்திற்கு வலுசேர்த்த்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக